என்குறள் 806 - 815 :
உறவியல்:
தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தான்வாய்க்கும்
தந்தையெனும் பந்தச் சிறப்பு .............................. புகாரி 5971
கணவனின் செல்வத்தை செய்யும் செலவைக்
கணித்திருப்பது இல்லாள் பொறுப்பு .................... புகாரி 5365
நல்லறம் தானே இறைவிருப்பு; பிள்ளைகளும்
செல்வமும் இவ்வாழ்வின் ஈர்ப்பு ....................... குர்ஆன் 18:46
சிந்தைத் தெளிவும் ஒழுக்கப் பயிற்சியும்
தந்தை வழங்கும் பரிசு
உணவளிக்க ஆளில்லா வேளையில் நானுண்டு
எனும்மகள்தான் உன்தர்மம் ஆம்
(மேலுள்ள இரு மொழிகளுக்கும் .. (கவனக் குறைவால்)குறிப்பெண்ணைக் பதியத் தவறிவிட்டேன். அறிந்தோர் சுட்டினால் மிக நன்றியுடனிருப்பேன்
இல்லறவியல்:
சமஉரிமை கொண்டோர் எனினும் தமக்கிடையில்
விட்டுக் கொடுத்தால் சிறப்பு ........................ புகாரி 2455
இல்லறத்தில் விட்டுக் கொடுத்தொத்துப் போவதில்
இல்லை ஒருபோதும் தப்பு ......................... புகாரி 2694
இல்லற வாழ்வை இறைவழியில் வாழ்வது;
நல்லறம் செய்வதற்கு ஒப்பு ........................ முஸ்லிம் 1674
உறவுநலம் காக்கச் செலவிடல் என்பது
உரியோர்க் கடமையா கும் ......................... புகாரி 5355
உறவின் நலம்காத்து வாழ்ந்து வருவோர்
உறவை விரும்பும் இறை ......................... புகாரி 5987