சாகுபடி வேண்டுமென்று சாயா(து) உழைத்திருப்பார்;
ஆகுமடி நல்விளைச்சல் அங்கு
477)
உழவுக்குப் பின்பும் களைவளர்ந்தால் உந்தன்
உழைப்பில் பிழையென்று கொள்
478)
வான்பொழிந்தும் மண்விளைந்தும் நல்லவிலை இல்லையெனில்
வீணாகும் ஏரின் உழைப்பு
479)
உழுவான் விழுவான் எழுவான்; அவனிங்கு
அழுதால் நமக்கே இழுக்கு
480)
விளைநிலம் எல்லாம் விலைநிலம் ஆனால்
நிலையென்ன ஆகும் இனி