இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 8, 2014

உறவுகள்


அறம்/ உறவதிகாரம் / என்குறள் 441-445 /

தாய்வந்து எனதருகில் தானமர்ந்தால் பின்னந்த
வானுலகு என்பதெல்லாம் பொய்

தங்கையிவள் மொண்டு வரும்கூழும்; கங்கையவள்
கொண்டு தரும்நீரும் ஒன்று

திக்காமல் எத்திக்கும் சொல்வதற்கு அச்சமில்லை;
அக்காவே எம்வாழ்வின் அச்சு

அக்காள் இருக்கும் வரைதான் தொடருமா
மச்சான் உடன்நல் உறவு

சொந்தங்கள் தள்ளியென்னை வைத்தாலும் என்அண்ணன்
தங்கத்தில் செய்துதந்தான் சங்கு