இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 18, 2016

உன் வழியைத் தேர்ந்தெடு ..!


656)
நூல்படித்தச் சான்றோரின் தோள்பிடித்துச் செல்வோரின்
வாழ்வமையும் எண்ணியது போல்

657)
கற்றவரைப் பின்தொடர்ந்தால் பேறு;செல்வம் பெற்றவரின்
பின்சென்றால் உன்கதை வேறு

658)
இக்கட்டில் உள்ளோரின் சொற்கேட்டுப் பின்தொடர்ந்தால்
சிக்கலுக்குள் சேர்க்கும் அது

659)
தீரருடன் பேசாமல் பின்போதல் என்பதுதேன்;
மூடருடன் பேசுவதும் வீண்

660)
யார்பின்னும் சேராமல் நேர்வழியை நீதேர்ந்தால்
ஊர்உன்னைப் பின்தொடரும் பார்

No comments: