நூல்படித்தச் சான்றோரின் தோள்பிடித்துச் செல்வோரின்
வாழ்வமையும் எண்ணியது போல்
657)
கற்றவரைப் பின்தொடர்ந்தால் பேறு;செல்வம் பெற்றவரின்
பின்சென்றால் உன்கதை வேறு
658)
இக்கட்டில் உள்ளோரின் சொற்கேட்டுப் பின்தொடர்ந்தால்
சிக்கலுக்குள் சேர்க்கும் அது
659)
தீரருடன் பேசாமல் பின்போதல் என்பதுதேன்;
மூடருடன் பேசுவதும் வீண்
660)
யார்பின்னும் சேராமல் நேர்வழியை நீதேர்ந்தால்
ஊர்உன்னைப் பின்தொடரும் பார்
Tweet | |||||
No comments:
Post a Comment