அனிதா :
என்குறள் 1096 - 1097 :
சிறுகனவை ஏற்றிப் பெருங்கனலாய் மாற்றிப்
பறந்ததுஎம் அக்னிக்குஞ்சு ஒன்று
தட்டிக் கொடுக்காமல் தட்டிவிட்ட தால்இன்று,
சரிந்த சரித்திரம்பார் இங்கு
அனிதாவின் வாய்மொழியும் கேள்வியும் :
என்குறள் 1098 - 1101 :
எதையோ படிக்கவைத்து, வேறெதிலோ தேர்வுவைத்தால்
சாகாமல் என்செய்வேன் சொல்
நேற்றுவரை தோற்றவர்தான் தொங்கினார், நூறுசதம்
வென்றஎனைத் தொங்கவைத்தீர் இன்று
தரவரிசை என்று, வரும்வரிசை கண்டு
கெட்டதென் குட்டிக் கனவு
தூக்கிவிடக் கேட்டுவந்தேன் மன்றம்முன், தூக்கிலிட்டுக்
கொள்என்று சொன்னது அது
மனிதா வா ,சேர்ந்தோர் அணி_தா வா :
என்குறள் 1092 - 1109 :
நோட்டையும் மாட்டையும் நீட்டையும் காட்டியுனை
பூட்டிவைக்கப் பார்ப்பாரை ஓட்டு
நீட்டென்றால் நீட்டவும் ஆட்டென்றால் ஆட்டவும்
வீட்டுநாய் இல்லையடா நீ
நீட்டென்றால் நீட்டும் குரங்காநீ, நீட்டி
முழங்கியுன் நோக்கத்தைக் காட்டு
விலக்குப் பெறச்சென்று விட்டு, விலைபோனோர்
வந்தால் வரவேற்போம் வா
வாதிடச் சென்றுவிட்டு, பேரம் முடிந்துவந்து,
சாதித்தக் கதைசொல்வார் பார்
ஊர்பார்க்க வேண்டுமென்று முந்திவந்து சந்திநிற்போர்
வேரறுத்து ஊதுவோம் சங்கு
பேத்தி வயதொத்தப் பிள்ளையைப் பெண்மணியாய்ப்
பார்ப்போரிங்கு என்னஇனம் கூறு
’’மருத்துவம் தான்படிப்பா?’’ என்றோர் மருத்துவரே
கூறினால் எங்கோ பிழை
’வ’ருத்துவர் ’’கிசுகிசு’’ :
என்குறள் 1110 - 1115 :
ஒதுக்கீட்டால் மேலேறி வந்துவிட்டு, அற்ப
ஒதுக்கீடிங்கு ஏனென்பார் பார்
ஆள்வோர் மனம்வந்து வீசுவதை வைத்துனது
வாழ்வினை ஓட்டென்பார் பார்
எச்சில் எறிவார் எனத்தெரிந்தால் பொச்சையும்
நக்கிவிடும் நாயாகென் பார்
இப்படித்தான் காண்கனவு என்றபின்னும் எப்படியோ
கண்டுகொண்டால் உன்தப்பென் பார்
சோற்றைப் பெறும்பொருட்டுச் செத்தவர்மேல் சேற்றையள்ளி
வீசவந்து முன்நிற்பார் பார்
மருத்துவரின் தந்தையை ஓர்அரசு ஊழியராய்
மாற்றியதைப் போற்றென்பார் பார்