இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 22, 2016

நபி மொழி - 5 .....இறை...அவன்....இறை(ய)வன் !


என்குறள் 706 - 710 :

குர்ஆன் 01:02
அகிலம் படைத்தான்; நிலைக்கவைத்தான்; எல்லாப்
புகழும் அவனுக்கே தாம்


குர்ஆன் 02:106
ஒன்றை மறுத்தான் எனிலதைக் காட்டிலும்
நன்றாய்த் தருவான் அவன்


குர்ஆன் 02:154
இறையின் வழியில் உயிரை இழந்தோர்
இறந்தவர் இல்லை உணர்



குர்ஆன் 02:190
போர்தான் எனினும் வரம்பை மீறினால்
ஏற்க மறுப்பான் அவன்


குர்ஆன் 06:103
உன்கண் அறியாமல் உன்கண்ணுக்கு உள்பார்க்கும்
நுட்பம் அறிவான் அவன்

No comments: