இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label தெளிவு. Show all posts
Showing posts with label தெளிவு. Show all posts

June 23, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 3


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் மூன்றாம்படி இது ...

961)
வந்தான் அரக்கன் மயில்உருவில். கந்தன்
கவனம் கவண்அரு கில்

(கவண் – கவட்டை, ஆயுதம்)
[பழிமொழி - கந்தன் கவனம் கவட்டையில்..]

962)
வாழ்நாளில் ஆநெய்க்கு முன்காலம், பூநெய்க்குப்
பின்காலம்
தந்தோர்க்கு வாழ்வு
(ஆநெய்=பசுநெய், பூநெய்=தேன்)
[பழிமொழி - ஆனைக்கொரு காலம், பூனைக்கொரு காலம்..]

963)
தேர்ந்தெடுத்துப் பந்திக்க முந்து, சேர்ந்தபின்
படைக்கச் சிலகாலம் பிந்து,
(பந்திக்க – இணைபார்க்க, படைக்க – குழந்தைபெற)
[பழிமொழி - பந்திக்கு முந்து..... ]

964)
களவும் கவறு(ம்) அற,அதற்குக் கற்றக்
களவோடு கத்து மற
(கவறு – சூது, அற - தவிர், கத்து – பொய், கயமை )
[பழிமொழி - களவும் கற்று மற ..]

965)
ஆடியில் வீசும் அடர்காற்று பட்டவுடன்
அம்மை* பறந்து விடும்
(*நோய்)
[>பழிமொழி - ஆடிக்காற்றில் அம்மி பறக்கும்..]

May 22, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 2


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் இரண்டாம்படி இது ...

என்குறள்:931 - 935
மண்குதிர்-ஐ நம்பி, நடுஆற்றில், தங்கிய
தண்ணீரில் கால்வைத்தால் தப்பு
(மண்குதிர் – மண் மேடு)
[அ]
மங்குதிரை மேல்முழு நம்பிக்கை வைத்து,ஆற்றில்
கால்வைத்தால்
ஆகிவிடும் தப்பு
(மங்குதிரை – கலங்கிய நீர்பரப்பு)
[பழிமொழி - மண்குதிரையை நம்பி.... ]

ஆயிரம் பேருக்கு போய்ச்சொன்னால் ஆகிவிடும்
நின்ற திருமணமும் நன்று
[பழிமொழி - ஆயிரம் பொய்சொல்லி.....]

ஆயிரம் வேரை அறிந்துகொண்டால் தானொருவன்
ஆவான் அரைமருத்து வன்
[பழிமொழி - ஆயிரை பேரைக் கொன்றவன்....]

நல்லமாடு என்றால் நிலையாய் வலுவாய்
தெளிவாய் பதிக்கும் சுவடு
[பழிமொழி - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ]

ஆதானம் செய்யாத செட்டியார் தன்கடமை
ஆற்றாமல் போனவர் ஆம்
[பழிமொழி - ஆதாயம் இல்லாமல் செட்டியார்.....]

May 14, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 1 (0 - 5)


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் முதல்படி இது ...

என்குறள்:921 - 925

பெண்கள் பற்றிய பழமொழிகளின் உண்மை நிலவரம் :
சேல்அகட்டிச் சாலையில் ஆள்வரப் பார்த்திருக்கும்
மாதரை நம்பிவிடா தே
(சேல் – கண்)
[மூலம்- சேலை கட்டிய மாதரை நம்பாதே]


உண்டி சுருக்கும் வழியை அறிந்தோரின்
பண்டிக்குக் சேரும் அழகு
(உண்டி – உணவு , பண்டி – வயிறு)
[மூலம்- உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு]

மாமி உழைத்தால்மண் ணுக்குஉரம் ஆகும்
மருமகளால் பொன்னுக்கு உரம்
[மூலம்- மாமியார் உடத்தால் மண்குடம்...... ]

பெண்புத்தி என்பதோர் ஆணின்பின் நின்றவனை
முன்செலுத்தும் புத்தியா கும்
[மூலம்- பெண்புத்தி, பின்புத்தி]

தாய்மேல் பழிசொல்லிக் கொல்வோரும் நீர்மேல்
பிழை
கண்டு சொல்வோரும் ஒன்று
[மூலம்- தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே]