இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

January 27, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



இயலாமை :
36)
கோட்டையெல்லாம் ஆண்டான் கணக்கு; ஒரேயொரு
கோட்டைநெல் போதும் எனக்கு


37)
வேண்டுமட்டும் கூர்வார்த்தை யால்கீறு; ஆனாலும்
வேண்டுமோர் வாய்சுடு சோறு


39)
பட்டிக்குள் ஆடு; முடிந்தவரை ஆடு;பலிப்
பட்டியலில் நீமுதல் ஆடு

January 24, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இன்பம், இன்பம் , இன்பம் :

33)
தகிக்கும்என் மார்மேல் குதிக்கும்உன் வேர்வை
பதிக்கும்நம் 'உள்ள' நிறைவு

34)
மதுப்பானை தோற்குமிந்த மாங்கனிக்(கு) உண்டாம்
மதயானைக் கொம்பொத்த காம்பு

35)
உன்னை உணர்ந்தவள் உன்னவள் என்றானால்
உன்பின்னாம் உண்மை உலகு

35)
காதல்தாம் இவ்வுலக மையம்; அதனால்தான்
ஆகுமெல்லாம் இன்ப மயம்

January 10, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


விலங்கும் விளக்கும் : சில கேள்விகள் :


31)
துளித்திவலைப் போதும் குழித்தவளை வாழ;
முழுத்தவலைத் தண்ணீர் எதற்கு

32)
வெந்தால் வருடும் மயிலிறகு; உண்டோ
இறகின் வலிக்கு மருந்து