இல்லாரின் அல்லலினை நீக்கநினை; நல்லாரின்
சொல்உனை வாழ்த்தும் நனை
512)
இல்லாரைக் காக்கும் செயலிலுன் பாதி
இழந்தாலும் இல்லை தவறு
513)
குறையை அணைக்கும் குணம்கொண்டோர்; அந்த
இறையின் அணைப்பிலிருப் பார்
514)
குறையும் இடமெல்லாம் அள்ளிஇறை; தானே
குறைவை நிறைக்கும் இறை
515)
தினம்தானம் செய்துவரும் நல்லோர் கணக்கில்
தனம்தானே சேர்ந்து விடும்