இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 20, 2016

ஐயன்மேல் ஐயம் கொள்வோர் தன்னால் வீழ்வார் ... !!!!!!!


குறளோனுக்கு ஆதரவாய் ’என்குரல்’ அதிகாரம் ஒன்று :


796)
பொதுமறையைத் தந்தவர்க்குச் செய்வோம் சிறப்பு;
பதுக்கி மறைப்பது எதற்கு


797)
எம்ஐயன் மேல்ஐயம் கொள்பவர்தாம் தன்னைத்தான்
நம்பா தவருக்குச் சான்று


798)
போற்றுவோர் ஏற்றம் பெறுவார்; தூற்றுவோர்
மாற்றம் அடைவார் பிறகு


799)
போற்றி இருந்திருக்க வேண்டியதை சாக்குக்குள்
போர்த்தியவர் சாக்கடைக்கு ஒப்பு


800)
சாதியில்லாப் பார்க்காணப் போதித்த ஐயனுக்குள்
சாதிகண்டார் நாதியில்லாச் சாது


801)
’மடச்சாமி யார்’சொல்லை மந்திரி ஏற்றால்
’மடச்சாமி’ யார்என்று கூறு


802)
நம்பி வருவோரின் சங்கை அறுப்போரா
கங்கைக் கரையிருக்கும் சாது


803)
பாக்களால் பாருக்கு உரைத்தவரைப் சாக்குக்குள்
சாத்திவிட்டுச் சொல்வார்பார் சாக்கு


804)
பாக்கொண்டு பாரை வடித்தவரின் நோக்கம்
உடைப்பவர் பாறைக்கும் கீழ்


805)
ஈரடிக்குள் வாழ்வை அடைத்தவரை ஓரடியில்
வீழ்த்த நினைத்தால் தவறு


No comments: