இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 30, 2015

இளையோரே ... சோதிப்பீரா ஏற்பீரா !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​

--- சுயபரிசோதனை ---
1)
விழுந்ததெங்கு என்பதைப் பாராது உனக்கு
வழுக்கியதெங்கு என்பதைப் பார்

2)
கூறியது யாரென்று பாராது; பாருக்குக்
கூறியது யாதென்று பார்

3)
வழித்தெறியும் முன்புஅறி; உள்ளிருக்க்க் கூடும்
வழிதெரிய வைக்கும் குறிப்பு

4)
கற்றதைக் கற்றுத் தரமறுக்கும் குற்றமனம்
கொண்டோரை விட்டு விலகு

5)
பாதி தெரிந்துகொண்டும் மீதி புரிந்துகொண்டும்
சேதிபுனை வோரை ஒதுக்கு


--- பொதுவாய் சில ---
6)
தரத்தினை உன்திறம் என்று கொண்டால்
வரும்உன்னைத் தேடி வரம்

7)
ஒளியூட்டும் உன்செயல் ஒன்றால் ஒளியட்டும்
மன்றத்தார் உள்ளத்து இருள்

8)
யாரெவர் என்றெதுவும் பாராது உதவநினை;
ஊருலகும் வாழ்த்தும் உனை

9)
செல்வாக்கு செல்வத்தைச் சேர்ந்ததன்று; சொல்வாக்கின்
சுத்தத்தைச் சார்ந்தது அது

10)
நானென்று நிற்காமல் நாணாமல் நாணலைப்போல்
நன்றாய் வளைவோர்க்கே வாழ்வு

இளையோரே ....இலக்கடைவீர் !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​

--- வெற்றி ---
1)
முன்மயக்கம் பின்தயக்கம் இல்லாத உன்இயக்கம்
வெற்றியிடம் சேர்த்து விடும்

2)
வெற்றிக்குப் பின்வரும் கர்வம் புதை;தொடரும்
வெற்றிக்கு அதுதான் விதை

3)
வெற்றிக்குப் பின்னும் அடங்கி இருப்பானின்
பின்ஒடுங்கி நிற்கும் அது

4)
மனதிடம் இல்லாதான் கொண்ட உடல்பலத்தால்
என்னபலன் வந்து விடும்

5)
எல்லையைத் தாண்டுவது ஏதெனினும் தொல்லைதரும்
முன்னரே வெட்டத் துணி

--- எச்சரிக்கை ---
6)
கவசமின்றி சாலைப் பயணம் எதற்கு;
திவசமின்றிப் போகும் உனக்கு

7)
நூறைஎட்டி விட்டால் உனக்காகக் காத்திருக்கும்
நூற்றியெட்டில் பெட்டியொன்று போ

8)
உருவத்தில் ஒன்றாது இருக்கப் பழகு;
பருவத்தில் பன்றி அழகு

9)
அகம்தவிர் உன்னுள்; வெளியே நிகர்எதிரி
உண்டாம் எதற்கும் அறி

10)
பயந்து பயந்துனது பாதம் பதித்தால்
பயந்தது போலாகும் போ

இளையோரே....அறிவீரா...துணிவீரா !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​

--- அறிவீரா ---
1)
ஆவணம் இன்றி அவைப்புகுந்தால் கோவணம்
போகும் நிலைதான் வரும்

2)
மழையில்லா ஊரில் குடைப்பிடித்தால் உந்தன்
நிலையின்மேல் ஐயம் வரும்

3)
எள்கேட்டால் எள்மட்டும் கொண்டுசெல்; இல்லையெனில்
எள்ளும்தான் எள்ளுமுனைக் கண்டு

4)
பின்தொடர்வோர் எல்லாம் பணிந்தவர் இல்லை;அதில்
உன்னைக் குறிவைப்போர் உண்டு

5)
எதிரியில்லை என்றாலும் வீழ்த்திவிடும்; வீழ்த்த
எதிரியில்லை என்னும் செருக்கு

--- துணிவீரா ---
6)
வெல்லுமெண்ணம் உன்னுள் வராத வரையிலும்
புல்லுமுனை வென்று விடும்


7)நெஞ்சினுள் அஞ்சுவதை கொஞ்சம்நீ காட்டுமிடம்
நஞ்சினைப் பாய்ச்சிவிடும் பாம்பு

8)
நெஞ்சினுள் மூர்க்கம் வளர்க்கமுனை; அஞ்சினால்
குஞ்சும் மிரட்டும் உனை

9)
எதிர்க்க முடியாதது என்றெதுவும் இல்லை
எதிரிக்கும் உண்டுபயம் நம்பு

10)
மிஞ்சியதைத் தந்துன் உழைப்பையள்ளித் தின்பவரை
மிஞ்சவும்ஓர் நாள்வரும் வாய்ப்பு

இளையோரே...உமக்குச் சொல்வேன் !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​


--- உன்னால் முடியும் ---
1)
வரம்தந்து வாழ்த்த முடியும் உனக்கு;
வரம்கேட்டு நிற்பது எதற்கு

2)
வாழைக்கும் உண்டாம் வழித்தொடர ஓர்கன்று;
நாளைநமக்(கு) உண்டென்று நம்பு

3)
எதனால் இழக்கிறாய் உன்தெம்(பு); எதுவுமிங்கு
சாத்தியமே சத்தியமாய் நம்பு

4)
தலைக்கனம் இல்லா(து) இலக்கணம் தாண்டு;
துலங்கும் புதிய உலகு

5)
தடைமுடையைக் கண்டுபிடி;. வென்றுமுடி; வாழ்வின்
மடைதிறக்கும் நல்ல படி

---அறிவரை சில ----
6)
பலம்கொண்டேன் என்று பலரைப் பகைத்தால்
பயனின்றிப் போய்விடும் வாழ்வு

7)
வாயில் கடக்கும் பொழுதுபிறர் வாயில்
விழாதவகை வாழ்வ(து) அறிவு

8)
தூக்கம் ஒருதோளும் ஏக்கம் மறுதோளும்
தூக்கினால் வீணாகும் வாழ்வு

9)
பழம்பெரும் சொற்பொருளை புத்திக்குள் ஏற்று;
பலம்பெறும் இவ்வுலக வாழ்வு

10)
துச்சமென்று யாரையும் தூற்றாதே; யார்க்குமுண்டு
உச்சமொன்றை வந்தடையும் வாய்ப்பு



September 25, 2015

ஆண்மையின் மறுபக்கம்...!


611)
ஆண்அழுதால் கோழையெனக் கொள்ளாதே; தான்யார்
எனஉணரும் வேளை அது

612)
பெண்மைமேல் ஆளுமை செய்யாதத் தன்மையே
உண்மையில் ஆண்மையெனக் கொள்

613)
ஆளுமையை ஓர்குழந்தை மேல்காட்டும் ஆணெல்லாம்
கோழையினம் என்போர்க்கும் கீழ்

614)
எப்பொழுதோர் பெண்உன்னை நம்பத் துணிவாளோ
அப்பொழுது தான்ஆவாய் ஆண்

615)
மீசையைக் காட்டி மடக்காமல் ஆசையைக்
கொட்டி அடக்குவான் ஆண்


September 17, 2015

கூடா நட்பு / உட்பகை ..!


606)
பசப்புமொழி பேசி அருகிருக்கும் நட்பே
கசப்பின் இருப்பிடமா கும்

607)
புரிந்துகொள்ளல் இல்லா உறவை உதறிப்
பிரிந்துசெல்லல் என்றும் சிறப்பு

608)
புரிந்தோரால் உண்டாகும் நோவு; பிரிந்தோரால்
உண்டாகும் நோயிலும் தீது

609)
வலிய வருவார்; விலகி விடுவார்;
வலியைத் தருவார் இவர்

610)
மெய்வாள்வேல் போலன்றி; சொல்லாமல் கொல்லுமாம்
பொய்யாய் இணைந்திருக்கும் நட்பு

September 15, 2015

கலிகாலம் ...இது கலிகாலம்...!



601)
ஊர்சேர்ந்து தேரிழுப்பார் என்பது(அ)ன்று; ஆறேழு
பேர்சேர்ந்தால் தேரெரிப்பார் இன்று

602)
சூழல்பார்த்து ஊழல் நடந்ததன்று; ஊழலில்லாச்
சூழலே இல்லையாம் இன்று

603)
மெய்யது உலவத் துவங்கும்முன்; பொய்யது
உலகத்தைச் சுற்றிவிடும் இன்று

604)
இயலாரின் வெற்றி; முயல்வோரின் தோல்வி;
இயல்பாகிப் போய்விட்டது இன்று

605)
ஏய்த்துப் பிழைக்குமந்தத் தந்திரத்தைக் கற்றோர்க்கே
வாய்க்கும் சுதந்திரம் இன்று

September 12, 2015

குறிப்புகள் சில ... உள்ளிருக்கும் செய்திகள் பல ...!


596)
வெள்ளம் பெருக்கெடுக்கும் வேளையிலும் பள்ளத்தைப்
பார்த்துத்தான் பாயும் புனல்

597)
கூர்முனைத் தாக்குதலைத் தாங்கிநிற்கும் பாறையை
வேர்முனை வீழ்த்தி விடும்

598)
இடைவெளி இல்லாது இடித்தால்; மறையும்
இடிமேல் இருக்கும் பயம்

599)
இருள்சூழ்ந்து இருக்கும் பொழுதே தெரியும்
மிகவும் தெளிவாய் நிலவு

600)
அருகில் இருந்தும் அகப்பை அறியா(து)
அருமை அமுதின் சுவை

September 9, 2015

இதுவும் நன்றிக்கடனே !


இன்று .... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...ஆம் நான் மீண்டு(ம்) பிறந்த மணநாளில் ..என்னவளுக்கு .... என்னாலான சின்னஞ் சிறுபரிசு !
591)
ஆண்டவன்முன் ஓம்சொன்னால்; ஆள்பவள்முன் ஆம்சொன்னால்
தானாகத் தேனாகும் வாழ்வு

592)
வேறாகி நிற்பேன்; நிலையகற்றிக் காலின்கீழ்
வேராகிக் காப்பாள் இவள்

593)
தடுமாறும் என்னை தரைமோதும் முன்பு
கரைசேர்க்க வந்தாள் இவள்

594)
வந்தாரைப் போஎன்றோர் சொல்சொல்லாள்; மந்தாரைப்
பூச்சொல்லால் செய்வாள் சிறப்பு

595)
உலர்ந்த உணவை மலர்ந்த முகத்தால்
விருந்தாக மாற்றிவிடு வாள்

September 3, 2015

வாய்ச்சொல் வீரர் !


586)
பின்புலத்தைத் தூக்கிமுன் பந்தியில் வைத்ததை
தன்பலம் என்பார் இவர்

587)
தற்செயலாய் வந்தடைந்த ஒன்றினை தன்செயலால்
வந்ததிது என்பார் இவர்

588)
நாறியதை ஊரறிந்த பின்னாலும்; தற்பெருமைக்
கூறித் திரிவார் இவர்

589)
பணிவாய் தணிவாய் பழகும் குணத்தை
துணிவில்லை என்பார் இவர்

590)
எள்ளின்றி நெய்எடுப்பேன்; தூண்டியில் முள்ளின்றி
மீன்பிடிப்பேன் என்பார் இவர்

August 21, 2015

இரட்டை நாக்கர்...!



581)
உன்னால் முடியும் திமிறென்பார்; பின்அவரே
ஏன்உனக்கு இத்திமிரென் பார்

582)
தப்பெதுவும் தண்டனைக்கு தப்பாது எனக்கொதிப்பார்;
தப்பேது எனக்குதிப்பார் பின்பு

583)
இப்படித்தான் நீயிருக்க வேண்டுமென்பார்; எப்படியும்
நானிருப்பேன் என்பார் பிறகு

584)
நல்லரைக் கெட்டவர் என்பார்;பின் கெட்டவரை
நல்லவர் என்பார் இவர்

585)
உப்பில்லா ஒன்றினை ஒப்பில்லை என்றுரைத்தால்
தப்பில்லை என்பார் இவர்


August 19, 2015

வந்து....எனக்கென வாய்த்தாளே...!


576)
அதுவேண்டும் என்பாள்; அதுவேண்டாம் என்பேன்;
அதுதான் நடக்கும் பிறகு

577)
புள்ளியிங்கு வேண்டாமே என்றுவைத்தேன் வேண்டுதலை;
துள்ளிவந்து வைத்தாள் அதை

578)
தலையாட்டச் சொன்னாள்; விளையாட்டாய்ச் செய்தேன்;
வினையாகிப் போனது அது

579)
நான்வேண்டும் என்பதை நீவேண்டாம் என்பாய்;
அதுதானே வேண்டும் எனக்கு

580)
முன்நின்று கூறுவாள் பெண்எதையோ; கண்ணில்
தெரிவதோ வேறு கதை

August 9, 2015

இதுதான் வாழ்க்கை !



571)
யாருக்கோ காத்திருக்கும் உன்மடியில் யார்யாரோ
வந்தமர்வார் என்பதுதான் வாழ்வு

572)
எதிர்பார்த்து இருந்தது எதிர்பாராப் போதுன்
எதிர்வந்து நிற்பதுதான் வாழ்வு

573)
விரும்பாத போதும் விரும்பியதை விட்டுத்
தரவேண்டும் என்பதுதான் வாழ்வு

574)
நான்நான்தான் நீநீதான் என்றால் அதுதாழ்வு;
நான்நீநாம் என்பதுதான் வாழ்வு

575)
யாருமில்லை என்றால் அதுதாழ்வு; யாருக்கும்
பாரமில்லை என்பதுதான் வாழ்வு

August 6, 2015

என்னவளே.....அடி என்னவளே .!!


566)
உன்னில்தான் என்னைநான் கண்டுகொண்டேன்; இன்றுவரை
தன்னைத்தான் கண்டதில்லை கண்

567)
விடையில்லை என்றால் விதியில்லை; நீயில்லை
என்றால் இனியில்லை வாழ்வு

568)
விழலெனக்கு நீரிறைக்க வந்தவளின் பாத
நிழலுக்கு நானே நிழல்

569)
விதையின்றி வேரில்லை உந்தன் நினைவன்றி
வேறில்லை என்னுலகில் பார்

570)
நாணவில்லை சொல்வதற்கு; வாய்ப்புவந்தால் வானவில்லைப்
போல்வளைவேன் நானவளின் முன்பு

August 2, 2015

நட்பு....ட்பு.....பு........பூ ...!!!!!!!!!!

--- நட்பு தின வாழ்த்துகள் ---
561)
ஆகாயம் கீழிறங்கும் நீநம்பு; உறவுக்குள்
ஆதாயம் தேடாது நட்பு

562)
தாளும்தோள் தாங்குவான் தோழன்; அவனால்தான்
வாழுமிந்தப் பாழும் உலகு

563)
வழிமொழிய மட்டுமல்ல; தப்பென்றால் உன்முன்
வழிமறித்தும் நிற்பதுதான் நட்பு

564)
உரிமை தரும்உறவைக் காட்டிலும் நன்றாம்
உறவை உருவாக்கும் நட்பு

565)
ஒருவர் பிரிந்தால் இறப்பது உறவாம்;
இறந்தால் பிரிவதுதான் நட்பு

August 1, 2015

மது.....து........த்து...........த்தூ...!!!!!!!!!!!!!!!


--- ஐயா . சசிபெருமாள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் ---

556)
பார்’என்று பாடிவைத்தார் பாரதி; பாருக்கு
அவர்பேரே வைப்போம் அதற்கு
(அல்லது)
பாருக்குள் நல்லநாடு என்றதனால்; பாருக்கு
அவர்பேரே வைக்கும் அரசு


557)
தண்ணி அஅடிப்பார்அபார் தன்னை அழிப்பார்பார்
இம்மண்ணில் எங்கும்பார் பார்

558)
பழமாக உண்போரைப் போற்றும்; ரசமாக
வேண்டுவோர்க்கு ஊற்றும் அரசு

559)
பாருக்குள் நோக்கும்நம் பிள்ளைகள்; பாருக்குள்
விக்கும்நாள் பார்க்கும் அரசு

560)
மதுமீறிப் போகுமிடம் பேயாய் முதுகேறிப்
பாயும் அகத்திருக்கும் பாம்பு



July 30, 2015

###### கலாம் ......!!!!!!!!!


546)
அல்லாவின் பிள்ளைஇவர்; இவ்வுலகப் பிள்ளைநம்
எல்லார்க்கும் தந்தை இவர்

547)
வல்லவன் செல்லும் வழியெல்லாம் வாழ்வமையும்;
புல்லும் இவன்கையில் கோல்

548)
விதைத்தவனுக்கு உண்டாம் உறக்கம்; புதைந்தாலும்
தூங்குவது இல்லை விதை

549)
பாவம் புதைக்கப் படும்தீவின் மத்தியில்
நேசம் விதைத்தனர் இன்று

550)
எட்டும் தொலைவிலின்று எட்டாம் அதிசயம்;
எட்டாத் தொலைவிலுண்டு ஏழு

551)
தெற்கில் உதித்து கிழக்கில் மறைந்தது
இரண்டாவது ஆதவன் ஒன்று

552)
கற்பிக்கும் போதேதம் சித்தம்போல் இவ்வுடலை
நீத்தசித்தர் அற்புதத்தைப் பார்

553)
பத்திரிக்கைப் போட்டார்; அவர்பற்றிப் போடாதப்
பத்திரிக்கை ஒன்றில்லை இன்று

554)
உடலொன்றை நீத்தார்; உடன்பல கோடி
உடலுக்குள் பூத்தார் இவர்

555)
தனியொருவன் பின்கூட்டம் கூடுமெனக் காட்ட
இனியொருவன் தேவையில்லை இங்கு


July 20, 2015

கொஞ்ச(சு)ம் கோபக்காரி....!



541)
அதிகாரம் மட்டும் அறிவாள்; அதனால்தான்
வள்ளுவனுக்கு என்னவளும் ஒப்பு

542)
கன்னிவந்து சேர்த்தணைப்பாள் என்றோடி வந்தேன்நான்;
கண்ணிவைத்துப் காத்திருந்தாள் பெண்

543)
நொய்நொய்நொய் என்றவள் நைத்தால்தான் பொய்சொல்லும்
நோய்வளரும் என்பதுவும் மெய்

544)
நோக்கம் நிறைவேற்றிக் கொள்ளக் கரைவதில்
காக்கையும் காதலியும் ஒன்று

545)
எடுத்தெறிந்து பேசுவாள்; கையில் கிடைப்பது
எடுத்தெறிவாள் பேச்சைத் தொடர்ந்து


July 18, 2015

நீயே எடுத்துக் காட்டு...!


536)
தலைமறையும் முன்வாழ்ந்து காட்டு; தலைமுறையும்
உன்தடத்தைப் பின்தொடரும் வாழ்வு

537)
உன்வரையில் உண்மையைக் கொண்டிருந்தால் இவ்வுலகில்
உள்ளவரை நன்மை தரும்

538)
தவறிழைக்க வாய்ப்பிருந்தும் தள்ளித் தவிர்ப்போரை
தெய்வமெனப் போற்றும் உலகு

539)
வீழ்வதுநீ என்றாலும் அங்(கு)அழுவோர் நால்வர்
எனில்நீ இறைநிலைக்கும் மேல்

540)
தூற்றும் பகையோரின் துன்பம் துடைத்தெறி;
போற்றும் வகையமையும் வாழ்வு

July 11, 2015

பழகப் பழகு !!!



531)
மாற்றமெது வந்தாலும் சற்றும் தடுமாற்றம்
இன்றியதை ஏற்கப் பழகு

532)
விருப்பம் நிறைவேற வில்லையெனில் வந்த
வரவை விரும்பப் பழகு

533)
தாழ்ந்து பழகும் குணத்தானின் தோள்தாங்கி
வாழ்த்தி உயர்த்தும் உலகு

534)
எதையும் இலகாய் அணைக்கப் பழகு;
நுழையும்உன் வாழ்வில் அழகு

535)
மாற்றத்தை ஏற்கும் மனமுடையோர்; ஏற்றம்
பெறுவார்தாம் எண்ணும் அளவு

July 7, 2015

முத்தம்...அதுவும் மொத்தம் !!


அவளதிகாரம் : முத்த தினம்
526)
முன்வாயில் முற்றமதில் என்வாயில் வாய்வைத்தான்;
பின்சொன்னான் முத்தமது என்று



527)
இதழால் அவன்தீண்டும் அந்நொடியில் பெற்றேன்
முதல்மழையைத் தொட்ட உணர்வு


528)
உன்மீசை குத்தும் பொழுது தொடர்கவென்று
என்ஆசை கத்தும் தொழுது


529)
தொப்பலாய்த் தான்நனைந்தேன்; என்னவனின் முத்தத்தால்
மொத்தம் உலர்ந்துவிட்டேன் நான்


530)
முத்தம்உண்டு என்றால்தான் என்னுயிர் நீளும்;நான்
முத்த(ம்)உண்டு வாழும் விலங்கு

July 3, 2015

பூவும் ..தலையும்....!


ஏற்றத்தாழ்வு !

521)
நெல்லில் பதரொதுக்கும் ஓர்குழு; அள்ளிஅதில்
நெல்தேடும் இன்னோர் குழு

522)
பட்டுத் துணிதொல்லை என்போரும்; ஒட்டுத்
துணியில்லை என்போரும் வேறு

523)
செல்வரின் சன்னலில் சட்டைகளுண்டு; இல்லாரின்
சட்டையில் சன்னல்கள் உண்டு

524)
இருப்போர்க்குத் தேவையெல்லாம் கைகழுவச் சாறு;
வறியர்க்கோ கையளவுச் சோறு

525)
இல்லார் பசியடக்க ஓடுவார்; செல்வர்
பசியெடுக்க ஓடுவார் பார்

July 1, 2015

பெண்ணை அறிந்தேன்...என்னைத் துறந்தேன்... துறவியானேன் !



516)
பெண்வலைக்குள் போய்ப்பாயும் ஆணினம்தான் தன்தலைமேல்
வெண்ணைவைத்துக் காத்திருக்கும் கொக்கு

517)
பெண்மையைக் கண்டுகொண்டேன் இவ்வுலகின் உச்சமென்று;
உண்மையை உண்டகன்றேன் பின்பு

518)
சந்தித்தேன் ஒவ்வோர் நொடியும்தேன்; ஓய்ந்தபின்
சிந்தித்தேன்; எல்லாமும் வீண்

519)
எத்திக்கும் தித்திக்கும் பெண்மானின் மாயையை
புத்திக்குச் சொல்வதுயார் இங்கு

520)
அறிவுரையை எள்ளும்; அறிஞரைக்கீழ் தள்ளும்;
அரிவையின் மேல்கொள்ளும் ஈர்ப்பு

June 28, 2015

உதவு....!


511)
இல்லாரின் அல்லலினை நீக்கநினை; நல்லாரின்
சொல்உனை வாழ்த்தும் நனை

512)
இல்லாரைக் காக்கும் செயலிலுன் பாதி
இழந்தாலும் இல்லை தவறு


513)
குறையை அணைக்கும் குணம்கொண்டோர்; அந்த
இறையின் அணைப்பிலிருப் பார்

514)
குறையும் இடமெல்லாம் அள்ளிஇறை; தானே
குறைவை நிறைக்கும் இறை

515)
தினம்தானம் செய்துவரும் நல்லோர் கணக்கில்
தனம்தானே சேர்ந்து விடும்

June 25, 2015

குழந்தை உலகும் .....வளர்ப்பு முறையும்....!


506)
ஊக்கம் கிடைத்து வளரும் குழந்தையின்
நோக்கம் அடையும் சிறப்பு


507)
கற்பதிலும் கற்றுத் தருவதிலும் குட்டிக்
குழந்தைக்கு நாமில்லை ஈடு


508)
புகழ்மொழி கேட்டு வளரும் குழந்தை
பழகும் வழியறி யும்


509)
கேலியால் வேகும் குழந்தை; அறிவில்லாக்
கோழிபோல் ஆகும் வளர்ந்து


510)
அடக்கி வளர்க்கும் குழந்தை; அடங்க
மறுக்கும் வளர்ந்த பிறகு


June 24, 2015

பெண்ணினம் மட்டுமே அறிந்த மொழி!


மெளனமொழி :
501)
உம்மென்று எழுப்புவாள் ஓரொலி; கும்மென்று
எழும்பும் எனக்குள் கிலி

502)
இனிநீஉம் என்றால் கணினியெல்லாம் ஏனாம்;
கனிநீயே போதும் எனக்கு

503)
நச்சரித்துக் கொண்டே இருக்கும் - அவள்உதிர்த்த
உச்சென்னும் உச்சரிப்பு ஒன்று

504)
எழுத்துசொல் இல்லா மொழிமெளனம்; என்றாலும்
உணர்த்தாத(து) என்றொன்றும் ஏது

505)
சொல்லா(து) உணர்த்துவதற்கு இல்லாள் அறிவாள்,சொல்
இல்லாத மெளன மொழி

June 22, 2015

இறையே....இறையே....!


496)
இறைஇருப்பைப் பற்றி இருப்போரைச் சுற்றி
இருப்பது இறையின் முறை

497)
கோடியினுள் உன்னைத்தேர்ந் தானெனில் உள்மறைந்த
சேதியுண்டு என்பது அறி

498)
தனியன்நான் என்று நினைப்பாய் எனில்நீ
இறைமறுப்போன் என்று பொருள்

499)
பரம்பொருளைப் போற்றி பெரும்பொருளைச் சாற்றி
பெறும்பொருளும் பாழாகும் நம்பு

500)
பெரும்பொருளைக் காட்டி வரம்பதிலாய்க் கேட்பாய்;
பரம்பொருளும் வைத்திருப்பார் ஆப்பு

June 19, 2015

கற்றதும்...பெற்றதும்.... !


491)
பட்டம் அறிவைத் தருவதில்லை; பட்ட
பிறகே வருமாம் அது


492)
கற்றடையும் கல்விக்கும்; வாழ்நாளில் பெற்றடையும்
கல்விக்கும் இல்லை தொடர்பு



493)
கற்றுவரும் பாடத்தைப் பற்றியிருந் தாலது
பெற்றுத் தரும்நற் சிறப்பு

494)
வாக்கியம் நன்றாய் வருவதைக் காட்டிலும்
வாக்கின் நயமே சிறப்பு

495)
எழுத்தில் பிழையிருந்தால் தட்டி; கருத்தில்
களையிருந்தால் கொட்டித் திருத்து

June 15, 2015

காதலின் கிர(க்)கத்தில் !


486)
சொல்லும் மொழியாலும் கொல்லும் விழியாலும்
வெல்லும் வழியறிவாள் பெண்


487)
பதுமையைப் போலிருப்பாள்; ஆற்றும் செயலால்
புதுமையின் எல்லை அவள்


488)
தூக்கத்தைத் தூவிவிட்டு ஏக்கத்தை ஏவுமவள்
நோக்கத்திற்கு ஊக்கம் கொடு


489)
மான்குட்டி தானிவள்; பூந்தொட்டித் தேனிவள்;
தேன்சிட்டென் வானவள் தான்


490)
வயலின்மேல் அஞ்சியவள் கால்வைக்கும் போது
வயலின்போல் கொஞ்சும் கொலுசு