யார்க்கும் தெரியாமல் செய்து வரும்தர்மம்
தீர்க்கும்உன் பாவத்தை ஆம் ...............புகாரி 1421
பிறரறியச் செய்துவரும் தர்மமும் நன்று;
பிறர்செய்யத் தூண்டும் அது ..............புகாரி 1421
தேவைக்கு மிஞ்சிய செல்வத்தை; இல்லாரின்
தேவை அறிந்துதர்மம் செய்............... புகாரி 1426
தான்செய்த தர்மத்தைச் சொல்லாது ஒளிப்போரைத்
தான்சேரும் நன்மையனைத் தும்.......... புகாரி 1430
அளந்து பிறருக்குத் தர்மம் அளிப்போர்க்கு
அளந்தே தருவான் இறை................. புகாரி 1433
Tweet | |||||
No comments:
Post a Comment