இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 28, 2016

நபி மொழி - 6 ... தர்மம் !


என்குறள் : 716 - 720
யார்க்கும் தெரியாமல் செய்து வரும்தர்மம்
தீர்க்கும்உன் பாவத்தை ஆம்
...............புகாரி 1421

பிறரறியச் செய்துவரும் தர்மமும் நன்று;
பிறர்செய்யத் தூண்டும் அது
..............புகாரி 1421

தேவைக்கு மிஞ்சிய செல்வத்தை; இல்லாரின்
தேவை அறிந்துதர்மம் செய்.
.............. புகாரி 1426

தான்செய்த தர்மத்தைச் சொல்லாது ஒளிப்போரைத்
தான்சேரும் நன்மையனைத் தும்
.......... புகாரி 1430


அளந்து பிறருக்குத் தர்மம் அளிப்போர்க்கு
அளந்தே தருவான் இறை
................. புகாரி 1433

No comments: