இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 6, 2016

பார்....இப்படியும் பார்...!




சோதனையியல் :
691)
வாய்ப்பு வருமென்று வாய்ப்பார்த்து நிற்காமல்
வாய்ப்பை உருவாக்கப் பார்

692)
கூறியது யாரென்று பாராது; பாருக்குக்
கூறியது யாதென்று பார்


693)
எதிலும் அடைஆழம் என்பார்; முதலில்
அவரது அடையாளம் பார்


694)
விழுந்ததெங்கு என்பதைப் பாராது உனக்கு
வழுக்கியதெங்கு என்பதைப் பார்


695)
நின்று தயங்கியவர் வென்றதில்லை; நன்றாய்த்
துவங்கியவர் நின்றதில்லை பார்

No comments: