இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 22, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 2


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் இரண்டாம்படி இது ...

என்குறள்:931 - 935
மண்குதிர்-ஐ நம்பி, நடுஆற்றில், தங்கிய
தண்ணீரில் கால்வைத்தால் தப்பு
(மண்குதிர் – மண் மேடு)
[அ]
மங்குதிரை மேல்முழு நம்பிக்கை வைத்து,ஆற்றில்
கால்வைத்தால்
ஆகிவிடும் தப்பு
(மங்குதிரை – கலங்கிய நீர்பரப்பு)
[பழிமொழி - மண்குதிரையை நம்பி.... ]

ஆயிரம் பேருக்கு போய்ச்சொன்னால் ஆகிவிடும்
நின்ற திருமணமும் நன்று
[பழிமொழி - ஆயிரம் பொய்சொல்லி.....]

ஆயிரம் வேரை அறிந்துகொண்டால் தானொருவன்
ஆவான் அரைமருத்து வன்
[பழிமொழி - ஆயிரை பேரைக் கொன்றவன்....]

நல்லமாடு என்றால் நிலையாய் வலுவாய்
தெளிவாய் பதிக்கும் சுவடு
[பழிமொழி - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ]

ஆதானம் செய்யாத செட்டியார் தன்கடமை
ஆற்றாமல் போனவர் ஆம்
[பழிமொழி - ஆதாயம் இல்லாமல் செட்டியார்.....]

May 15, 2017

நபிமொழி - 19 :- மும்முறை..! மும்முறை...!! மும்முறை.... !!!



என்குறள் ;- 926 -930
உம்உரை உள்வரையில் சென்றடைய வேண்டுமெனில்
மும்முறை சொல்லி விடு
............................ புகாரி 94

ஒருமுறை மேலும் ஒருமுறை மேலும்
ஒருமுறை போதும் உரை
............................ புகாரி 6337

இறையை நெருங்கும் கவியை வரவேற்க
மும்முறை கேட்பான் அவன்
......................... முஸ்லிம் 4540

’பொருள்வந்த பின்’உதவும் உந்தன் உறுதியை
மும்முறை தந்து விடு
..............................முஸ்லிம் 4632

கெட்டக் கனவெதும் கண்டால் தொழும்முன்
இடப்பக்கம் மும்முறை துப்பு
.............................. முஸ்லிம் 4550

தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தான்வாய்க்கும்
தந்தையெனும் பந்தச் சிறப்பு
.......................... புகாரி 5971

(+)
குடிப்போர்க்கு மும்முறை சாட்டையடி ஊட்டு
தொடர்வோர்க்கு சாவினைக் காட்டு ........................ அபுதாவூத் 3886


May 14, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 1 (0 - 5)


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் முதல்படி இது ...

என்குறள்:921 - 925

பெண்கள் பற்றிய பழமொழிகளின் உண்மை நிலவரம் :
சேல்அகட்டிச் சாலையில் ஆள்வரப் பார்த்திருக்கும்
மாதரை நம்பிவிடா தே
(சேல் – கண்)
[மூலம்- சேலை கட்டிய மாதரை நம்பாதே]


உண்டி சுருக்கும் வழியை அறிந்தோரின்
பண்டிக்குக் சேரும் அழகு
(உண்டி – உணவு , பண்டி – வயிறு)
[மூலம்- உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு]

மாமி உழைத்தால்மண் ணுக்குஉரம் ஆகும்
மருமகளால் பொன்னுக்கு உரம்
[மூலம்- மாமியார் உடத்தால் மண்குடம்...... ]

பெண்புத்தி என்பதோர் ஆணின்பின் நின்றவனை
முன்செலுத்தும் புத்தியா கும்
[மூலம்- பெண்புத்தி, பின்புத்தி]

தாய்மேல் பழிசொல்லிக் கொல்வோரும் நீர்மேல்
பிழை
கண்டு சொல்வோரும் ஒன்று
[மூலம்- தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே]