இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label ஆண். Show all posts
Showing posts with label ஆண். Show all posts

June 21, 2016

நெருப்புடா !


ஆண்_டா ! நெருப்பு_டா !!
761)
கத்தி உறைவிடுத்து; சுற்றித் தலையெடுப்பான்;
கத்தி அடங்கும் களம்


762)
உறையைவிட்டு வந்துவிட்ட வாளாய்; எதிரை
உறையவிட்டுப் பார்ப்பான் இவன்


763)
குத்தவரும் கத்திக்கும் நெஞ்செடுத்துக் காட்டிநிற்பான்;
உக்கிரத்தின் உச்சம் இவன்


764)
வெருட்டும் எதிரிகண்டு அஞ்சான்; வரட்டும்
எதிர்கொள்வேன் என்பான் இவன்


765)
கொல்ல வரும்பகையை வெல்ல; ஒருதிசைக்குச்
சொல்லிவர வைப்பான் இவன்


பி.கு : கபாலி / ஒரு குறியீடு ... எல்லார்க்குள்ளும் இருக்கும் இத்’தீ’

May 24, 2016

குடும்பத் தலைவன் .....!


ஆண் ... இவனே ஆண் !

(+)
711)
வென்றவள்நான் என்னும்தன் நம்பிக்கை;; இல்லாளைச்
சென்றடையச் செய்பவனே ஆண்


712)
மனைவியைத்தன் தாய்க்குச் சமமாய் நினைத்து
நிலைக்கவைத்தால் தானவன் ஆண்


713)
சிரித்திருக்க வைப்பதிலும்; பெண்ணின்கண் ணீரை
நிறுத்திவைக்கப் பார்ப்பவனே ஆண்


(-)
714)
இல்லாளை வென்றவன்நான் என்றெண்ணி வாழ்பவன்தன் இல்லறத்தில் வீழ்ந்தவன்தான் ஆம்

715)
இல்லாளை வெல்ல நினைப்பவன் இல்லறத்தில்
வெல்வதற்கு இல்லை வழி

September 25, 2015

ஆண்மையின் மறுபக்கம்...!


611)
ஆண்அழுதால் கோழையெனக் கொள்ளாதே; தான்யார்
எனஉணரும் வேளை அது

612)
பெண்மைமேல் ஆளுமை செய்யாதத் தன்மையே
உண்மையில் ஆண்மையெனக் கொள்

613)
ஆளுமையை ஓர்குழந்தை மேல்காட்டும் ஆணெல்லாம்
கோழையினம் என்போர்க்கும் கீழ்

614)
எப்பொழுதோர் பெண்உன்னை நம்பத் துணிவாளோ
அப்பொழுது தான்ஆவாய் ஆண்

615)
மீசையைக் காட்டி மடக்காமல் ஆசையைக்
கொட்டி அடக்குவான் ஆண்