இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 6, 2016

நபி மொழி - 4



என்குறள் 696 - 700 :
சொல்லியதை மிஞ்சுவோர்; நம்பிக்கை யைக்கொல்வோர்;
பொய்சொல்வோர் வஞ்சகர் ஆ
ம் .............. புகாரி 33


நம்பி, புனித இரவன்று நின்றுதொழும்
பொல்லார்ப் பழியழியும் ஆம்
............... புகாரி 35, 37


அறப்போர் புரிவது இறைமேல் நிறைந்திருக்கும்
நம்பிக்கை யுள்ஒன்றாம் ஆம்
.............. புகாரி 36


நிரந்தரமாய்ச் செய்யப் படும்நல் அறம்தான்
இறைக்கு மிகவிருப்பம் ஆம்
..............புகாரி 43


மார்க்கத்தை ஏற்றுள் நுழைந்தபின் வேற்றாகி
மாறியவர் யாருமில்லை ஆம்
............புகாரி 51

No comments: