இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 22, 2016

அரசு...இயல்.....அரசியல் !


அரசு (+)
701)
மன்னனை மக்கள் மறந்திருப்பார் என்றால்
நடப்பது நல்லாட்சி ஆம்

702)
மன்னன் குடியைப்போல் வாழ்ந்தால்; குடிக்கெல்லாம்
மன்னன்போல் வாழ்வமையும் ஆம்

703)
அசுர பலத்தில் அரசு; வெளுக்கும்
உரச நினைப்போர் முதுகு

அரசு (-)
704)
ஆயுதத்தின் போர்வைக்குள் ஆளுபவர் வாழ்ந்திருக்கும்
நல்லமைதிப் பூங்காநம் நாடு

705)
ஆட்சியால் நாடழிந்தால்; ஆள்வோரைத் தேர்ந்தெடுத்தோர்
தான்அதற்கு மொத்தப் பொறுப்பு

No comments: