இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
February 27, 2012
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
உலகம் :
54)
ஞாலத்தில் எல்லாம் இழந்துவிட்ட பின்வரும்
ஞானத்தால் என்ன பயன்
55)
துதித்துத் தொடர்வோரைத் தூற்றல்; நிழலை
மிதித்து நடப்பதைப் போன்று
56)
பொய்வந்து சாட்சியாய் உண்மையைச் சொன்னாலும்
மெய்யென ஏற்கா(து) உலகு
57)
வேதங்கள் சொல்லாத பேதங்கள் கண்டுணர்ந்து
வாதங்கள் செய்வ(து) எதற்கு
58)
பாடுபட்டோர் வாழ்வுயரப் பாதையில்லை; பாரெல்லாம்
கேடுகெட்டோர் வாழ்வே சிறப்பு
59)
உயரத்தில் ஏற்றம் இருப்ப(து) இயல்பு;
உயிரிடத்தில் மாற்றமெல்லாம் ஏது
February 13, 2012
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நாட்டு நடப்பு :
49)
தாழ விடாமல்தன் தோள்கொடுப்பான் தோழன்;உன்
தோள்தாழத் தொங்குபவன் வேறு
50)
நெல்லையை தில்லையை சென்னையையும் தாண்டுநீ
எல்லையெல்லாம் இல்லை உனக்கு
51)
முயல்பவரை முன்மொழியும் வெற்றி; தயங்குபவர்
பின்னால் ஒளியும் அது
52)
ஈசலுக்கும் கூட இணையில்லார் காட்டுவார்
ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு
53)
தேவையெல்லாம் தத்தளிப்போர்க்(கு) ஓர்துடுப்பு; வேண்டாம்
குளிர்காய அங்கோர் அடுப்பு
49)
தாழ விடாமல்தன் தோள்கொடுப்பான் தோழன்;உன்
தோள்தாழத் தொங்குபவன் வேறு
50)
நெல்லையை தில்லையை சென்னையையும் தாண்டுநீ
எல்லையெல்லாம் இல்லை உனக்கு
51)
முயல்பவரை முன்மொழியும் வெற்றி; தயங்குபவர்
பின்னால் ஒளியும் அது
52)
ஈசலுக்கும் கூட இணையில்லார் காட்டுவார்
ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு
53)
தேவையெல்லாம் தத்தளிப்போர்க்(கு) ஓர்துடுப்பு; வேண்டாம்
குளிர்காய அங்கோர் அடுப்பு
February 6, 2012
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
February 1, 2012
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
எல்லாம் அவள் :
40)
படித்தேன் அவளின் மடலை; அடைந்தேன்
படித்தேன் குடித்த உணர்வு
41)
நெஞ்சமெங்கோ பெண்பின் அலைந்திருக்க; கொல்லுமிங்கே
கொஞ்சமே மீந்த நினைவு
42)
பொழுதெல்லாம் என்னுள் விழுதாகிப் பூப்பாள்;
பழுதாகிப் போகும் மனது
43)
குளித்தவளைக் கண்டேன்; குழித்தவளை ஆனேன்;
வளியெல்லாம் எந்தனிசைப் பாட்டு
44)
மொய்க்கும்உன் கண்ணுக்(கு) இணையில்லை; இவ்வுலகை
மொய்யெழுதி வைப்பேன் அதற்கு
Subscribe to:
Posts (Atom)