“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்"
--- சுயபரிசோதனை ---
1)
விழுந்ததெங்கு என்பதைப் பாராது உனக்கு
வழுக்கியதெங்கு என்பதைப் பார்
2)
கூறியது யாரென்று பாராது; பாருக்குக்
கூறியது யாதென்று பார்
3)
வழித்தெறியும் முன்புஅறி; உள்ளிருக்க்க் கூடும்
வழிதெரிய வைக்கும் குறிப்பு
4)
கற்றதைக் கற்றுத் தரமறுக்கும் குற்றமனம்
கொண்டோரை விட்டு விலகு
5)
பாதி தெரிந்துகொண்டும் மீதி புரிந்துகொண்டும்
சேதிபுனை வோரை ஒதுக்கு
--- பொதுவாய் சில ---
6)
தரத்தினை உன்திறம் என்று கொண்டால்
வரும்உன்னைத் தேடி வரம்
7)
ஒளியூட்டும் உன்செயல் ஒன்றால் ஒளியட்டும்
மன்றத்தார் உள்ளத்து இருள்
8)
யாரெவர் என்றெதுவும் பாராது உதவநினை;
ஊருலகும் வாழ்த்தும் உனை
9)
செல்வாக்கு செல்வத்தைச் சேர்ந்ததன்று; சொல்வாக்கின்
சுத்தத்தைச் சார்ந்தது அது
10)
நானென்று நிற்காமல் நாணாமல் நாணலைப்போல்
நன்றாய் வளைவோர்க்கே வாழ்வு
Tweet | |||||
No comments:
Post a Comment