பின்புலத்தைத் தூக்கிமுன் பந்தியில் வைத்ததை
தன்பலம் என்பார் இவர்
587)
தற்செயலாய் வந்தடைந்த ஒன்றினை தன்செயலால்
வந்ததிது என்பார் இவர்
588)
நாறியதை ஊரறிந்த பின்னாலும்; தற்பெருமைக்
கூறித் திரிவார் இவர்
589)
பணிவாய் தணிவாய் பழகும் குணத்தை
துணிவில்லை என்பார் இவர்
590)
எள்ளின்றி நெய்எடுப்பேன்; தூண்டியில் முள்ளின்றி
மீன்பிடிப்பேன் என்பார் இவர்
Tweet | |||||
No comments:
Post a Comment