இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 3, 2015

வாய்ச்சொல் வீரர் !


586)
பின்புலத்தைத் தூக்கிமுன் பந்தியில் வைத்ததை
தன்பலம் என்பார் இவர்

587)
தற்செயலாய் வந்தடைந்த ஒன்றினை தன்செயலால்
வந்ததிது என்பார் இவர்

588)
நாறியதை ஊரறிந்த பின்னாலும்; தற்பெருமைக்
கூறித் திரிவார் இவர்

589)
பணிவாய் தணிவாய் பழகும் குணத்தை
துணிவில்லை என்பார் இவர்

590)
எள்ளின்றி நெய்எடுப்பேன்; தூண்டியில் முள்ளின்றி
மீன்பிடிப்பேன் என்பார் இவர்

No comments: