இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 22, 2015

இறையே....இறையே....!


496)
இறைஇருப்பைப் பற்றி இருப்போரைச் சுற்றி
இருப்பது இறையின் முறை

497)
கோடியினுள் உன்னைத்தேர்ந் தானெனில் உள்மறைந்த
சேதியுண்டு என்பது அறி

498)
தனியன்நான் என்று நினைப்பாய் எனில்நீ
இறைமறுப்போன் என்று பொருள்

499)
பரம்பொருளைப் போற்றி பெரும்பொருளைச் சாற்றி
பெறும்பொருளும் பாழாகும் நம்பு

500)
பெரும்பொருளைக் காட்டி வரம்பதிலாய்க் கேட்பாய்;
பரம்பொருளும் வைத்திருப்பார் ஆப்பு

No comments: