526)முன்வாயில் முற்றமதில் என்வாயில் வாய்வைத்தான்;
பின்சொன்னான் முத்தமது என்று
527)இதழால் அவன்தீண்டும் அந்நொடியில் பெற்றேன்
முதல்மழையைத் தொட்ட உணர்வு
528)உன்மீசை குத்தும் பொழுது தொடர்கவென்று
என்ஆசை கத்தும் தொழுது
529)தொப்பலாய்த் தான்நனைந்தேன்; என்னவனின் முத்தத்தால்
மொத்தம் உலர்ந்துவிட்டேன் நான்
530)முத்தம்உண்டு என்றால்தான் என்னுயிர் நீளும்;நான்
முத்த(ம்)உண்டு வாழும் விலங்கு
Tweet | |||||
No comments:
Post a Comment