அதுவேண்டும் என்பாள்; அதுவேண்டாம் என்பேன்;
அதுதான் நடக்கும் பிறகு
577)
புள்ளியிங்கு வேண்டாமே என்றுவைத்தேன் வேண்டுதலை;
துள்ளிவந்து வைத்தாள் அதை
578)
தலையாட்டச் சொன்னாள்; விளையாட்டாய்ச் செய்தேன்;
வினையாகிப் போனது அது
579)
நான்வேண்டும் என்பதை நீவேண்டாம் என்பாய்;
அதுதானே வேண்டும் எனக்கு
580)
முன்நின்று கூறுவாள் பெண்எதையோ; கண்ணில்
தெரிவதோ வேறு கதை
Tweet | |||||
No comments:
Post a Comment