இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 3, 2015

பூவும் ..தலையும்....!


ஏற்றத்தாழ்வு !

521)
நெல்லில் பதரொதுக்கும் ஓர்குழு; அள்ளிஅதில்
நெல்தேடும் இன்னோர் குழு

522)
பட்டுத் துணிதொல்லை என்போரும்; ஒட்டுத்
துணியில்லை என்போரும் வேறு

523)
செல்வரின் சன்னலில் சட்டைகளுண்டு; இல்லாரின்
சட்டையில் சன்னல்கள் உண்டு

524)
இருப்போர்க்குத் தேவையெல்லாம் கைகழுவச் சாறு;
வறியர்க்கோ கையளவுச் சோறு

525)
இல்லார் பசியடக்க ஓடுவார்; செல்வர்
பசியெடுக்க ஓடுவார் பார்

No comments: