இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 12, 2015

குறிப்புகள் சில ... உள்ளிருக்கும் செய்திகள் பல ...!


596)
வெள்ளம் பெருக்கெடுக்கும் வேளையிலும் பள்ளத்தைப்
பார்த்துத்தான் பாயும் புனல்

597)
கூர்முனைத் தாக்குதலைத் தாங்கிநிற்கும் பாறையை
வேர்முனை வீழ்த்தி விடும்

598)
இடைவெளி இல்லாது இடித்தால்; மறையும்
இடிமேல் இருக்கும் பயம்

599)
இருள்சூழ்ந்து இருக்கும் பொழுதே தெரியும்
மிகவும் தெளிவாய் நிலவு

600)
அருகில் இருந்தும் அகப்பை அறியா(து)
அருமை அமுதின் சுவை

No comments: