வெள்ளம் பெருக்கெடுக்கும் வேளையிலும் பள்ளத்தைப்
பார்த்துத்தான் பாயும் புனல்
597)
கூர்முனைத் தாக்குதலைத் தாங்கிநிற்கும் பாறையை
வேர்முனை வீழ்த்தி விடும்
598)
இடைவெளி இல்லாது இடித்தால்; மறையும்
இடிமேல் இருக்கும் பயம்
599)
இருள்சூழ்ந்து இருக்கும் பொழுதே தெரியும்
மிகவும் தெளிவாய் நிலவு
600)
அருகில் இருந்தும் அகப்பை அறியா(து)
அருமை அமுதின் சுவை
Tweet | |||||
No comments:
Post a Comment