இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 24, 2015

பெண்ணினம் மட்டுமே அறிந்த மொழி!


மெளனமொழி :
501)
உம்மென்று எழுப்புவாள் ஓரொலி; கும்மென்று
எழும்பும் எனக்குள் கிலி

502)
இனிநீஉம் என்றால் கணினியெல்லாம் ஏனாம்;
கனிநீயே போதும் எனக்கு

503)
நச்சரித்துக் கொண்டே இருக்கும் - அவள்உதிர்த்த
உச்சென்னும் உச்சரிப்பு ஒன்று

504)
எழுத்துசொல் இல்லா மொழிமெளனம்; என்றாலும்
உணர்த்தாத(து) என்றொன்றும் ஏது

505)
சொல்லா(து) உணர்த்துவதற்கு இல்லாள் அறிவாள்,சொல்
இல்லாத மெளன மொழி

No comments: