இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 9, 2015

இதுதான் வாழ்க்கை !



571)
யாருக்கோ காத்திருக்கும் உன்மடியில் யார்யாரோ
வந்தமர்வார் என்பதுதான் வாழ்வு

572)
எதிர்பார்த்து இருந்தது எதிர்பாராப் போதுன்
எதிர்வந்து நிற்பதுதான் வாழ்வு

573)
விரும்பாத போதும் விரும்பியதை விட்டுத்
தரவேண்டும் என்பதுதான் வாழ்வு

574)
நான்நான்தான் நீநீதான் என்றால் அதுதாழ்வு;
நான்நீநாம் என்பதுதான் வாழ்வு

575)
யாருமில்லை என்றால் அதுதாழ்வு; யாருக்கும்
பாரமில்லை என்பதுதான் வாழ்வு

No comments: