இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 25, 2015

ஆண்மையின் மறுபக்கம்...!


611)
ஆண்அழுதால் கோழையெனக் கொள்ளாதே; தான்யார்
எனஉணரும் வேளை அது

612)
பெண்மைமேல் ஆளுமை செய்யாதத் தன்மையே
உண்மையில் ஆண்மையெனக் கொள்

613)
ஆளுமையை ஓர்குழந்தை மேல்காட்டும் ஆணெல்லாம்
கோழையினம் என்போர்க்கும் கீழ்

614)
எப்பொழுதோர் பெண்உன்னை நம்பத் துணிவாளோ
அப்பொழுது தான்ஆவாய் ஆண்

615)
மீசையைக் காட்டி மடக்காமல் ஆசையைக்
கொட்டி அடக்குவான் ஆண்


No comments: