இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 9, 2015

இதுவும் நன்றிக்கடனே !


இன்று .... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...ஆம் நான் மீண்டு(ம்) பிறந்த மணநாளில் ..என்னவளுக்கு .... என்னாலான சின்னஞ் சிறுபரிசு !
591)
ஆண்டவன்முன் ஓம்சொன்னால்; ஆள்பவள்முன் ஆம்சொன்னால்
தானாகத் தேனாகும் வாழ்வு

592)
வேறாகி நிற்பேன்; நிலையகற்றிக் காலின்கீழ்
வேராகிக் காப்பாள் இவள்

593)
தடுமாறும் என்னை தரைமோதும் முன்பு
கரைசேர்க்க வந்தாள் இவள்

594)
வந்தாரைப் போஎன்றோர் சொல்சொல்லாள்; மந்தாரைப்
பூச்சொல்லால் செய்வாள் சிறப்பு

595)
உலர்ந்த உணவை மலர்ந்த முகத்தால்
விருந்தாக மாற்றிவிடு வாள்

1 comment:

duraian said...

வாழ்த்துகள் :))