இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 30, 2009

உனக்குள் ஒருவன்..!


தீவிரவா தத்தின் துளைக்குமந்த வேர்தனை
தீவிரமாய்த் தூரறுக்கும் வாய்ப்புக்கும் - தீயாய்
எரிக்கவும் காத்திருக்கி றானொருவன்; உன்னுள்
இருக்கும் அவனையு ணர்
[29-09-09]

தீவிர வாதத்தின் கூர்மிகுந்த வேர்தனை
தீவிரமாய்த் தேடித் தரைவீழ்த்த - தீயின்
தனலாக வாய்ப்புக்(கு) தவிக்கும் ஒருவன் ;
உனக்குள் அவனை உணர் ..
[04-10-09]

No comments: