இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 23, 2009

வானும் நானும்


ஒற்றைத் தலையணையில் ஓட்டுவெளி யில்தனியே
வெற்றுத் தரையினில் வீழ்ந்திருந்தேன் - சுற்றிவரும்
வெண்மேகம்; எட்டடியில் வட்டநிலா; வீழ்ந்தது
என்கா லடியில்சொர்க் கம் ..

No comments: