இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2009

நான்


தன்னையெது வும்மிகா தென்றதோர் உள்மனக்
கணக்கிட் டபடியேயி ருந்திடுவேன் - உண்மையில்
தன்னை உணராமல் எண்ணத்துள் மூழ்கியே
தன்னையும் தாண்டா தவன்



திருத்தம் :

தானறியா ஒன்றிருக்கா தென்றதோர் உள்மனதில்
நானறிந்த வாறிருப்பேன் நம்புவீர் -- ஞானமாய்
தன்னை உணராமல் தன்எண்ணம் மூழ்க்கியே
தன்னையும் தாண்டா தவன்

--சி. ஜெயபாரதன்

No comments: