இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 27, 2009

காத்திருக்கும்....!


மறையாத சூரியன்; மண்ணில் எனக்குக்
கரையாத சந்திரன வன்தான் - வரும்வரைக்
காத்திருப்பேன் தெற்கேநான்; இந்திய எல்லையைக்
காத்து வடக்கில வன்

என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; கரையாமல்
காத்திருப்பேன் உன்னையிங்கு நான்

No comments: