இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2009

மாமியாரான மருமகள்


மருமகளாய் வந்துயே மாந்தமா மிக்கேன்
மருமகளின் எண்ணம் எதுவும் புரியவில்லை;
நம்பியே வந்தோரின் உள்ளம் மிதிப்பவர்
நிம்மதி யும்நிலைக் கா(து)

மருமகளாய் ஏமாந்த மாமிக்கு வந்த
மருமகளின் ஏக்கம் அணைக்கத் தெரியவில்லை;
பட்டுணர்ந்த வாழ்க்கையின் முக்கியப் பாடமது
பட்டென்(று) மறந்தது ஏன்?
18-10-09

No comments: