இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 28, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




அனுபவப் பாடம் :
24)
நாடகம் ஆடுமிந்த பூடக மானுடர்க்கே
ஊடகம் செய்யும் சிறப்பு

25)
பின்தூற்றும் வீணர் வியக்க எழுந்துவிடு;
தன்னால் வியர்க்கும் அவர்க்கு

26)
வாய்க்குள் புகட்டாமல் சோறெடுத்(து) உண்ணுமோர்
வாய்ப்பைத் தருவது சிறப்பு

27)
தூரம் மிக அதிகம் உன்முன்னால்; இப்பொழுதே
பாரம் சுமக்கப் பழகு

No comments: