இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2009

வெளிச்சம் தேடும் விளக்கு

(09.05.11ல் திருத்தியது )

தண்ணியப் போட்டுவந்து மூஞ்சியிலக் குத்துறான்;
திண்ணையில கண்சொக்கிக் கக்குறான் - என்னசெய்ய?
சுள்ளுன்னு கஞ்சிவச்சு சூடாக் கொடுத்திட்டு
சுள்ளிப் பொறுக்கப்போ ணும்

இது ஆரம்ப நிலை வடிவம் :

தண்ணியப் போட்டுவந்து தூக்கிப்போட்(டு) சாத்தீட்டு
கண்தெரியா(து) கீழேக் கிடக்கிறான் - என்னசெய்ய?
சுள்ளுன்னு கஞ்சிவச்சு சூடாக் கொடுத்திட்டு
சுள்ளிப்பொ றுக்கப்போ ணும்

No comments: