
எல்லாமும் ஆவாளே இல்லாள் :/இன்பம்
( நாளை எங்கள் மணநாள் : அவளுக்கு என்குறளைப் பரிசாகக் கொடுத்துப் பதிலுக்கு அவள்குரலைப் பெறுவேன் .... வாழ்த்துங்கள் எங்களை :)
206)
தாய்பத்துத் திங்கள்தான்; தன்னாயுள் தாண்டியும்
என்னைச் சுமப்பாள் இவள்
207)
நான்வந்து தோள்சாய்க்கும் ஏணியவள்; தான்வந்தென்
தோள்சாயும் தோழி அவள்
208)
நெடும்தூரம் எல்லாம் நொடியில் தொடும்தூரம்
ஆகுமவள் வந்த பிறகு
209)
துயில்கிறது கண்ணிரண்டு; நாணும் மயிலிறகு;
தானும் அழகில்லை என்று
210)
சிறுவெள்ளை வானில் இருநிலவு; வட்டக்
கருநிலவு என்னவளின் கண்
Tweet | |||||
1 comment:
super sir.
Post a Comment