இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 25, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




உனக்குள் இருப்பவனை உணர் :
/பொருள்
236)
எதிரியாய்த் துள்ளும் எவனையும் வீழ்த்(து);உன்
எதிர்வந்(த) எமனையும் சேர்த்து

237)
தருணம் எதிர்பார்த்தென் தோள்தொங்கும் அந்த
மரணத்தைக் கொல்வேன்ஓர் நாள்

238)
அறிவோம் எதிர்தளை; வந்துவிடும் வேளை;
அரிவோம் எதிரின் தலை

239)
எவனென்றால் என்ன; எமன்வந்தான் என்றால்தான்
என்ன; எதிர்கொண்(டு) எழு

240)
அறியாதென் முன்வந்து தோற்றோடும் யாரும்
அறியார்நான் தான்வாலி என்று

No comments: