உனக்குள் இருப்பவனை உணர் :/பொருள்
236)
எதிரியாய்த் துள்ளும் எவனையும் வீழ்த்(து);உன்
எதிர்வந்(த) எமனையும் சேர்த்து
237)
தருணம் எதிர்பார்த்தென் தோள்தொங்கும் அந்த
மரணத்தைக் கொல்வேன்ஓர் நாள்
238)
அறிவோம் எதிர்தளை; வந்துவிடும் வேளை;
அரிவோம் எதிரின் தலை
239)
எவனென்றால் என்ன; எமன்வந்தான் என்றால்தான்
என்ன; எதிர்கொண்(டு) எழு
240)
அறியாதென் முன்வந்து தோற்றோடும் யாரும்
அறியார்நான் தான்வாலி என்று
Tweet | |||||
No comments:
Post a Comment