ஏன் ...?!/ பொருள்
226)
கையூட்(டு) எனும்கள்ளம் அன்பளிப்பாய் மாறியின்று
கட்டணம் என்றானது ஏன்
227)
மரம்விதைத்து சாலைசென்ற(து) அன்றுதான்; இன்று
மரம்புதைத்த சாலைகள் ஏன்
228)
பெருக்கியள்ளும் குப்பையை வீதியில் வீசிவரும்
குற்றமற்றத் தன்மைவந்த(து) ஏன்
229)
தனித்தனியாய் வாழும் முறைதான் இனிதென்னும்
எண்ணம் உருவான(து) ஏன்
230)
கோடிகள் மொத்தமும் நாட்டிலுள்ள கேடிகளை
மட்டுமே நாடுவ(து) ஏன்
Tweet | |||||
No comments:
Post a Comment