
அறிந்ததைச் சொல்லவா ?
196)
நித்தம் கிடைத்தால் அதுமுத்தம் என்றாலும்
தித்திக்கா(து) என்ப(து) உணர்
197)
தீராத கோபமுன்னை சேரா(த) இடம்சேர்க்கும்;
போராக்கித் தான்முடியும் நம்பு
198)
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு
199)
உரல்குழிக்குள் போய்விழுவார்; பின்விழித்தால் குத்தும்
உலக்கைமேல் சொல்வார் பழி
200)
வகைக்குள் உனைத்திணித்தால் உண்டாகும் உட்பகை;
தீயின்றி ஏது புகை.
Tweet | |||||
No comments:
Post a Comment