இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 1, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



அறிந்ததைச் சொல்லவா ?

196)
நித்தம் கிடைத்தால் அதுமுத்தம் என்றாலும்
தித்திக்கா(து) என்ப(து) உணர்


197)
தீராத கோபமுன்னை சேரா(த) இடம்சேர்க்கும்;
போராக்கித் தான்முடியும் நம்பு


198)
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு


199)
உரல்குழிக்குள் போய்விழுவார்; பின்விழித்தால் குத்தும்
உலக்கைமேல் சொல்வார் பழி


200)
வகைக்குள் உனைத்திணித்தால் உண்டாகும் உட்பகை;
தீயின்றி ஏது புகை.


No comments: