இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 18, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்


வில்லி:/இன்பம்
221)
கசக்கி எறிந்தாள்; எரிந்தாலும் என்னுள்
கசக்கா(து) அவளின் நினைவு

222)
வீழ்ந்துவிடும் எண்ணத்தில் நானிருப்பேன்; எப்படியும்
வீழ்த்திவிடும் நோக்கில் அவள்

223)
நாசுக்காய் உள்ளம் நசுக்குவாள்; சொல்லாமல்
நாசம் விதைப்பாள் அவள்

224)
விடைத்தாள் எனக்குள்; விதிகள் மறந்தேன்;
விடைத்தாள் முழுதும் அவள்

225)
என்னவென்ற கேள்வியுடன் நின்றிருப்பேன்; ஓர்நொடிக்குள்
என்னைவென்று சென்றிருப்பாள் பெண்

No comments: