இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 8, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



எல்லாமும் ஆவாளே இல்லாள் :/இன்பம்
( நாளை எங்கள் மணநாள் : அவளுக்கு என்குறளைப் பரிசாகக் கொடுத்துப் பதிலுக்கு அவள்குரலைப் பெறுவேன் .... வாழ்த்துங்கள் எங்களை :)

206)
தாய்பத்துத் திங்கள்தான்; தன்னாயுள் தாண்டியும்
என்னைச் சுமப்பாள் இவள்


207)
நான்வந்து தோள்சாய்க்கும் ஏணியவள்; தான்வந்தென்
தோள்சாயும் தோழி அவள்


208)
நெடும்தூரம் எல்லாம் நொடியில் தொடும்தூரம்
ஆகுமவள் வந்த பிறகு


209)
துயில்கிறது கண்ணிரண்டு; நாணும் மயிலிறகு;
தானும் அழகில்லை என்று


210)
சிறுவெள்ளை வானில் இருநிலவு; வட்டக்
கருநிலவு என்னவளின் கண்