இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 29, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




’அ’ தந்தான் ’ஆ’சான் :



191)
கொற்றவன்முன் கற்றவன் நிற்பான் பயம்துறந்து;
கொற்றவன் நிற்பான் பணிந்து


192)
மானவன்தான் என்றாலும் முன்பவனும் ஓர்குருவின்
மாணவன்தான் என்ப(து) அறி

(மானவன் = அரசன், வீரன், தலைவன்)

193)
படிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்பார்:
படிக்கல்லாய் ஆவாய் உணர்


194)
தருவது மட்டுமே தன்செயல் என்னும்
குருவிற்(கு) இணையில்லை இங்கு


195)
புரியாமல் கற்கும் எதுவும் நிலைக்கா(து)
அதுவாகும் நீர்மேல் எழுத்து

No comments: