721)
முன்நரை என்னும் குறைமறைந்து போய்விடும்
முள்முருங்கை உண்டுவரு வோர்க்கு
722)
நெல்லிக் கனிநான்கு நாளும்உண்; சொல்லிஇனி
நீளும்உன் வாழ்வுபிறர் முன்
723)
அருகம்புல் சாற்றின் அருமை அறிவாய்;
குருதியைச் சுத்தம்செய் வாய்
724)
அகத்துள் புழுவை அழிக்கும் அகத்தி;
அளவாய்ப் புசிக்கும் பொழுது
725)
வாழை இலைகொண்டு காயத்தைப் போர்த்து;
கொடும்தீயின் தாக்கத்தைப் போக்கு
Tweet | |||||
2 comments:
பாட்டியோடு இணைந்திட்டார்
இரு வரிக்குறள் சொல்லறிஞர்
பாரினில் எவருளார் அளித்திட
மாற்றுக் கருத்தவர்க்கு
மிக நன்றி ஐயா :)
Post a Comment