631)
எந்தையிடம் கேட்டேன் வரமொன்று; சொன்னான்உன்
தந்தைதான் அந்தவரம் என்று
632)
தந்தைமை என்னவென்று நானறிந்தேன்; என்சொந்தக்
கால்ஊன்றி நிற்கும் பொழுது
633)
திட்டியபின் தாயைவைத்துத் தட்டித் தரும்தகப்பன்
ஆயிரத்து எட்டுத்தாய்க்கு ஒப்பு
634)
என்றும் நடித்ததில்லை என்றாலும் நம்கதையின்
நாயகன் நம்தந்தை தான்
635)
அன்போடு பின்தொடரும் அப்பாவை அம்போடு
அலைபவராய்ப் பார்க்கும் உலகு
Tweet | |||||
No comments:
Post a Comment