இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 6, 2016

அப்பா ....!


இன்று அப்பாவின் நாள் .... அந்தநாள் நினைவோடு நான்...............!
631)
எந்தையிடம் கேட்டேன் வரமொன்று; சொன்னான்உன்
தந்தைதான் அந்தவரம் என்று

632)
தந்தைமை என்னவென்று நானறிந்தேன்; என்சொந்தக்
கால்ஊன்றி நிற்கும் பொழுது

633)
திட்டியபின் தாயைவைத்துத் தட்டித் தரும்தகப்பன்
ஆயிரத்து எட்டுத்தாய்க்கு ஒப்பு

634)
என்றும் நடித்ததில்லை என்றாலும் நம்கதையின்
நாயகன் நம்தந்தை தான்

635)
அன்போடு பின்தொடரும் அப்பாவை அம்போடு
அலைபவராய்ப் பார்க்கும் உலகு

No comments: