இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 9, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இயற்கையே இவள்தானோ !

161)
மேகம்போல் மூண்டாள்; கொடும்பூதம் போல்சூழ்ந்தாள்;
வேகமாய் என்னுள் மழை

162)
எண்ணமெல்லாம் என்னவள்; சேர்ந்திடும் நாள்வரை
வண்ணமில்லா வானவில் நான்

163)
கோடை வெயிலிலும் கொஞ்சியவள் வந்துநின்றால்
வாடைக் குளிர்தான் எனக்கு

164)
பக்கென்றுப் பற்றிவிடும் தொட்டவுடன்; பாவிமகள்
பத்து விரலும் திரி

165)
வீழ்ந்துவிடும் எண்ணத்தில் நான்;வீழ்த்தும் திண்ணத்தில்
நீளும் அவளின் கனவு

No comments: