
குட்டிக் கதை சொல்லவா ?
186)
தேன்தான் கொடுக்குமென்(று) எண்ணித் தொடராதே;
தேனீக்கும் உண்டாம் கொடுக்கு
187)
ஓடி ஒளிந்துவிடும் பாம்பைக்கை யால்பிடித்தால்
ஆடி அடங்கிவிடும் வாழ்வு
188)
எலிஅழுதால் பூனை விடாது; வலிக்க
எதிர்த்தால் பிறக்கும் வழி
189)
புலியில்லா ஊரில் தெருவெல்லாம் கூத்தாம்;
எலிதான் நடத்தும் அரசு
190)
ஐந்தடக்கி நிற்கும்; உறுமீன் வரும்வரையில்
சைவமாய்க் காத்திருக்கும் கொக்கு
Tweet | |||||
No comments:
Post a Comment