
கோபத்தில் அவளிருந்தால் ...!
181)
வானம் பறக்க முயல்வேன்நான்; ஐயத்தில்
வானம் பறிப்பாள் அவள்
182)
கேள்விக் குரிய பதில்பலக் கொண்டவளாம்
கேள்விக் குறியாம் அவள்
183)
நாளை வருவேன் எனச்சொல்வாள்; நான்நம்பி
நாளையெண்ணிக் கொண்டிருப் பேன்
184)
ஆத்திரத்தில் பேசா(து) இருக்கும் அவளறிவாள்
பாத்திரத்தால் பேசும் மொழி
185)
”வழிபடு என்றுன்னை வேண்டவில்லை; போகும்
வழிவிடு போதும் எனக்கு”
Tweet | |||||
No comments:
Post a Comment