
அறிந்ததைச் சொல்லவா உனக்கு ?
166)
எள்வேண்டும் என்போர்முன் எண்ணையுடன் சென்றால்உன்
எண்ணம்மேல் குற்றம் வரும்
167)
மண்ணில் எதிர்பார்க்கும் மாற்றம் எதையும்நீ
உன்னில் இருந்தே தொடங்கு
168)
பூவுள் மறைந்திருக்கும் நாகம்;உன் நாவுள்
மறைந்திருக்கக் கூடும் விசம்
169)
விசாலமாய் ஆக்குன் மனதை; உறவின்
விலாசமாய் மாறும் அது
170)
பிறர்குறையை நக்குவதைக் காட்டிலும் தன்கறையை
நீக்கினால் சேரும் சிறப்பு
Tweet | |||||
No comments:
Post a Comment