இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 5, 2009

திருக்குறளும் , என் குரலும்...!

அதிகாரம் 12 : நடுவு நிலைமை

112)
நேர்நிலையில் சேர்த்தோரின் செல்வம்; நிலைத்தவர்
வாரிசுக்கும் நன்மை தருமென்றும் - பாரினில்
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து
--------------(14)

[முதல்குறள் ஈற்று = தரும் ; ஆசு = என்றும்]

114)
நல்லார் நடுவிலார் என்பதை அவரவர்
மக்கள் குணமுணர்த் தும்பார் - தலைவர்
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
-----------------(15)

[முதல்குறள் ஈற்று = தும் ; ஆசு = பார்]

2 comments:

பகுத்தறிவு said...

மிக அருமை...! இன்றுதான் உங்கள் பதிவுகளைக் கண்டேன்... அத்தனையும் முத்துகள்!!! நறுக்குகளையும்(haikoo) படித்தேன்... வாழ்த்துகள்...

tamilboy said...

அத்தனையும் அருமை.. வாழ்த்துகள் .!